பெண் கொடுத்த புகாரை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார்.. வீட்டிற்கு சென்று பார்த்தபோது தெரிந்த உண்மை..

பெண் கொடுத்த புகாரை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார்.. வீட்டிற்கு சென்று பார்த்தபோது தெரிந்த உண்மை..


man-try-to-abuse-women-and-she-cut-his-private-part

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மர்மநபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது அவரது பிறப்புறுப்பை பெண் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட சம்பவமானது மத்திய பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் உள்ள உமரிஹா என்ற பகுதியில் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட 45 வயது மதிக்கத்தக்க பெண் தனது கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தநிலையில், தனது 13 வயது மகனுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதனை தெரிந்துகொண்ட மர்மநபர் ஒருவர் இரவு 11 மணியளவில் அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். முதலில் அவன் திருடன் என நினைத்த அந்த பெண், தனது மகனை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி, உதவிக்கு அக்கம் பக்கத்தினரை கூட்டிவருமாறு அனுப்பியுள்ளார்.

சிறுவனும் வெளியே சென்றுவிட, அதன்பின்னர்தான் தெரியவந்துள்ளது அந்தநபர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய வந்தான் என்று. இந்நிலையில் தனியாக இருந்த அந்த பெண்ணை மர்மநபர் தனது ஆசைக்கு இனங்கும்படி வற்புறுத்த அந்த பெண் மறுத்துள்ளார். இதனால் வலுக்கட்டாயமாக அந்த நபர் அந்த பெண்ணுடன் உறவில் ஈடுபடமுயன்றுள்ளார்.

இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தனது கட்டிலுக்கு கீழே இருந்த அருவாளை எடுத்து அந்த மர்மநபரின் பிறப்புறுப்பை துண்டாக வெட்டியுள்ளார். இதில் அந்த நபர் இரத்தம் சொட்ட சொட்ட அங்கையே வலியால் கதறிக்கொண்டிருந்தநிலையில், அந்த பெண் அங்கிருந்து தப்பிச்சென்று அருகில் இருந்த காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்துள்ளார்.

அந்த பெண் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனே அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று, அங்கு மயங்கி கிடந்த அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இரண்டு தரப்பு புகார்களையும் ஏற்றுக்கொண்ட போலீசார் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.