ஆசைக்கு இணங்க மறுத்த மருமகள்! வெட்டி கொன்ற மாமனார்! தானும் விஷம் குடித்து தற்கொலை!
ஆசைக்கு இணங்காத மருமகள். வெட்டி கொன்ற கொடூர மாமனார். ராஜஸ்தான் மாநிலம் சாரு மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயதான நபர் ஒருவர் தனது மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தனது மகனையும் மர்மக்களையும் தனது வீட்டிலேயே தங்க வாய்த்த அவர், தனது மகன் இல்லாத நேரங்களில் தனது மருமகளை அவரது ஆசை வலையில் விழவைக்க ஏற்பாடுகள் செய்துள்ளார்.
இரட்டை அர்த்த பேச்சுகள், உரசல்கள் எனத் தொடர்ந்த மாமனாரின் தொந்தரவால் ஆத்திரம் அடைந்த இளம்பெண், அவருடன் பேசுவதை ஒரு கட்டத்தில் தவிர்த்துள்ளார்.
இருந்தாலும் மருக்களை அடையும் மாமனாரின் முயற்சி நிக்கவில்லை. அவரை யப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று முயற்சித்துள்ளார். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த மருமகள் அவரது கணவருடன் தனி குடித்தனம் சென்றுள்ளார்.
அப்போதும் தனது மருமகளை விட மனமில்லாத மாமனார் தனது மகன் வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார். நாட்கள் சென்றது. தமபத்தினர் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்து பள்ளி செல்லும் அளவிற்கு வளந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் அலுவலக வேலை விசயமாக தலைநகர் ஜெய்ப்பூருக்கு தனது மகன் சென்றுவிட்டதை அறிந்த அவர், மருமகளை சந்திக்கும் நோக்குடன் அங்கு சென்றுள்ளார். அங்கு பேரப்பிள்ளைகள் இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவர், மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ஆனால், அவரது ஆசைக்கு மருமகள் இணங்காததால் ஆத்திரமடைந்த மாமனார், தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து, மருமகளின் தலை, கழுத்து, கை, கால் என பல இடங்களிலும் வெட்டியுள்ளார்.
வலியால் அந்த பெண் கதறியதை கண்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர், பிறகு காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, மருத்துவமனைக்குச் சென்று அவரது வாக்குமூலத்தை பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். அதற்குள் அங்கிருந்து தப்பிச் சென்ற மாமனார், காவல்துறையினரின் விசாரணைக்கு பயந்து, தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.