அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
தலைக்கேறிய போதை.! பாம்பை கழுத்தில் சுற்றிகொண்ட ஆசாமி.! பின் நடந்ததை பார்த்தீங்களா! ஷாக் வீடியோ!!
தலைக்கேறிய போதை.! பாம்பை கழுத்தில் சுற்றிகொண்ட ஆசாமி.! பின் நடந்ததை பார்த்தீங்களா! ஷாக் வீடியோ!!
குடிபோதையில் இருக்கும் சிலர் தாங்கள் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் பல்வேறு அபாயகரமான விஷயங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு நபர் ஒருவர் பாம்பை எடுத்து கழுத்தில் சுற்றிக்கொண்டு பின் அவதிபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலம் கார்வா அருகே கிதசோட் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் பிர்ஜலால் ராம். மது பழக்கத்திற்கு அடிமையான அவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து அப்பகுதியில் தகராறு செய்வாராம். அவ்வாறு மதுஅருந்திவிட்டு அவர் நடந்துவந்த போது பாம்பு ஒன்று அவரது வழியில் சென்றுள்ளது. அதனை கண்டு டென்ஷனான அவர் பாம்பை தூக்கி தனது கழுத்தில் சுற்றிக் கொண்டுள்ளார்.
#Watch: झारखंड के गढ़वा में अजगर को गले में माला की तरह लटकाने की कोशिश एक शख्स को भारी पड़ गई। अजगर ने शख्स की गर्दन को बुरी तरह जकड़ लिया।#Jharkhand #Python #Viralvideo pic.twitter.com/5qdtFpJZnY
— Hindustan (@Live_Hindustan) November 10, 2022
ஆனால் கொஞ்ச நேரத்தில் அவரது கழுத்தை பாம்பை இறுக்க துவங்கியுள்ளது. இந்நிலையில் அவர் பாம்பை எடுக்கப் போராடியும் முடியவில்லை. மேலும் இருந்தவர்களும் அச்சத்தில் அவரிடம் நெருங்கவில்லை. இந்த நிலையில் இதனைக் கண்ட ராமின் மகன் மற்றும் அவரது நண்பர் இருவரும் இணைந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு ராமுவின் கழுத்தில் இருந்த பாம்பை அப்புறப்படுத்தியுள்ளனர்
அதிர்ஷ்டவசமாக ராமிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில் ராமின் கழுத்தில் சுற்றி இருந்த பாம்பை எடுப்பதற்கு அவரது மகன் போராடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.