கத்தி அழுதேன்.! மூலையில் சிறுநீர் கழித்தேன்.! லிப்டிற்குள் சிக்கி தவித்த நபர்.! 2 நாட்கள் பட்ட துயரங்கள்!!



man-shares-bad-experience-struggle-inside-lift

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 59 வயது நிறைந்த ரவீந்திரன் நாயர் என்பவர் கடந்த சனிக்கிழமை மருத்துவ பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவமனையின் 2வது மாடிக்கு செல்வதற்காக அவர் லிப்டில் ஏறியுள்ளார். லிப்ட் திடீரென கோளாறு ஏற்பட்டு பாதியிலேயே நின்றது. 

லிப்டிற்குள் சிக்கிய நபர் 

இந்நிலையில் ரவீந்திரன் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து அவர்களும் பல இடங்களில் ரவீந்திரனை தேடியுள்ளனர். இந்த நிலையில் 2 நாட்களாக இயங்காத லிப்ட் நேற்று சரிசெய்யப்பட்ட நிலையில், லிப்ட்டின் உள்ளே ரவீந்திரன் மயக்கமான நிலையில் கிடந்துள்ளார். அதனை தொடர்ந்து அவரை மீட்டு உடனடியாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: திருப்பதியில் ஓவர் சேட்டை.. ஆந்திரா போலிசிடம் சிக்கிய டிடிஎஃப் வாசன்!!

Lift

லிப்டிற்குள் பட்ட கஷ்டங்கள் 

உயிர் பிழைத்த ரவீந்திரன் இதுகுறித்து கூறுகையில், நான் லிப்டில் சிக்கியதும் உடனே அவசர உதவி எண்ணிற்கு போன் செய்தேன். ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை. லிட்டில் இருந்த எச்சரிக்கை பட்டனையும் அழுத்திதேன். ஆனால் யாரும் உதவ வரவில்லை. ஒரு மூலையில் சிறுநீர் கழித்தேன். சில நேரங்களில் கத்தி சத்தமாக அழுதேன். என்னால் தூங்கவே முடியவில்லை. தொடர்ந்து எச்சரிக்கை பட்டனை அழுத்திக் கொண்டே இருந்தேன். லிப்டுக்குள் ஃபேன், வெளிச்சம் இல்லை என்றாலும் காற்று சற்று நுழைந்ததால் என்னால் மூச்சு விட முடிந்தது என தனது மோசமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

 

 

 

 

இதையும் படிங்க: "வாங்க ஏழைகளா.." 5,000 கோடி ரூபாய் செலவில் நடந்த சிக்கன கல்யாணம்.!! ஆனந்த் அம்பானி திருமணத்தின் ஷாக்கிங் புள்ளிவிவரம்.!!