திரிசூல டாட்டூவை வச்சு போலீஸ் கண்டுபிடித்த கொலையாளி.! சிக்கியது எப்படி.?



maharastra-police-cracked-a-case-by-getting-clue-from-t

மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே நகரில் பெண் ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் கையில் வரைந்திருந்த திரிசூலம் டாட்டூ மூலமாக அவர் யார் என்று அடையாளம் காணப்பட்டு  கொலையாளியும் கண்டறியப்பட்ட சம்பவம்  பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே நகரில் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி தலை இல்லாத பெண் ஒருவரின் சடலம்  காவல்துறையினர் ஆள் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் இறந்த பெண் யார் என்று தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்தப் பெண் கையில்  வரைந்திருந்த திரிசூலம் டாட்டூ மூலமாக அவர் யார் என்று அடையாளம் காணப்பட்டது.

maharastra

 

காவல்துறையின் விசாரணையில் இறந்த பெண் 23 வயதான அஞ்சலி என்பது  தெரிய வந்தது. மேலும்  இச்சம்பவம் தொடர்பாக அவரது வீட்டிற்கு விசாரிக்க சென்ற போது  அவர் இறந்த தினத்திலிருந்து அவரது கணவரும் மாயமாக இருப்பது காவல்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து அவரது கணவரை தீவிரமாக தேடிய காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில்  தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து எதற்காக கொலை செய்தார்  என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.