பாயை போல சாலையை மடித்த கிராம மக்கள்; பிரதமரின் கிராமப்புற சாலைத்திட்டத்தில் தரமற்ற சாலை அமைப்பு..!

பாயை போல சாலையை மடித்த கிராம மக்கள்; பிரதமரின் கிராமப்புற சாலைத்திட்டத்தில் தரமற்ற சாலை அமைப்பு..!



maharashtra-prime-minister-village-road-construction-sc-JVKJ9E

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்னா மாவட்டம், அம்பாட் தாலுகா கிராமத்தில் தார் சாலை புதிதாக அமைக்கப்பட்டது. பிரதமரின் கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்கப்பட்டது.

இந்த சாலைப்பணிகள் தரமற்று நடைபெற்ற நிலையில், அப்பகுதி மக்கள் கேட்டபோது ஜெர்மன் தொழில்நுட்பத்தின் கீழ் சாலை அமைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், புதிதாக அமைக்கப்பட்ட சாலையை உள்ளூர் மக்கள் தார்பாய் போல மடித்து எடுத்தனர். இந்த சாலையை அமைத்த பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.