நாடே பேரதிர்ச்சி.. 20 வயது பெண் பாலியல் பலாத்காரம், கொலை.. அழுகிய நிலையில் சடலம் மீட்பு.!

நாடே பேரதிர்ச்சி.. 20 வயது பெண் பாலியல் பலாத்காரம், கொலை.. அழுகிய நிலையில் சடலம் மீட்பு.!



Maharashtra Mumbai Kurla area 20 Aged Woman Sexual Abused and Murder

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள குர்லா பகுதியில், உபயோகத்தில் இல்லாத காலி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் இருந்து 20 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

பெண்ணின் சடலத்தை காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கையில், பிணமாக மீட்கப்பட்ட பெண்மணி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளது உறுதியானது. 

Mumbai

பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அவர் யாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்? உடல் எப்படி கட்டிடத்திற்கு கொண்டு வரப்பட்டது? என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இந்த சம்பவம் மீண்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை பதிவு செய்துள்ளது.