காதலர் தினத்தை கொண்டாட நினைத்த இளைஞர்; மரண பயத்தை காண்பித்த பெண்தரப்பு.. லாரி டயர் நடுவே சிக்கிய எலியாக சோகம்.!

காதலர் தினத்தை கொண்டாட நினைத்த இளைஞர்; மரண பயத்தை காண்பித்த பெண்தரப்பு.. லாரி டயர் நடுவே சிக்கிய எலியாக சோகம்.!



Madhya Pradesh Man Travel Meet Girlfriend Then Kidnap By Girls Relative 

 

காதலர் தினத்தை கொண்டாட நினைத்த நபருக்கு நடந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கார்வாரா, நரசிங்பூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞர் அனுராக் ஜாதவ். இவருக்கு அங்குள்ள சிந்துவாரா பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுடன் சமூக வலைத்தளம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், காதலர் தினத்தன்று பெண்ணை சந்தித்து காதலை வெளிப்படுத்தலாம் என்ற எண்ணத்தில் இளைஞர் இருந்துள்ளார். இதனையடுத்து, தனது ஊரில் இருந்து 125 கி.மீ தொலைவில் உள்ள சிந்துவாராவுக்கு சென்றுள்ளார். 

அங்கு பெண்ணை சந்திக்க ஆவலுடன் இருந்த இளைஞரை, பெண்ணின் உறவினர்கள் சைஜு, அபய், முகேஷ் ஆகியோர் தங்களுடன் அழைத்துச்சென்று பிணையக்கைதியாக்கி இருக்கின்றனர். 

விபரீதத்தை உணர்ந்த இளைஞர் தனது பெற்றோருக்கு தொடர்புகொண்டு விபரத்தை தெரிவிக்கவே, அவர்கள் உடனடியாக காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற அதிகாரிகள் இளைஞரின் செல்போன் எண் இருப்பிடத்தை சோதித்து, உள்ளூர் காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். 

அவர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்து இளைஞரை மீட்டனர். மேலும், மேற்கூறிய சிறுமியின் உறவினர்கள் மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.