மகளை பலாத்காரம் செய்த காமக்கொடூரன்.. இரண்டு துண்டாக வெட்டி பலி கொடுத்த பாசமிகு தந்தை.!

மகளை பலாத்காரம் செய்த காமக்கொடூரன்.. இரண்டு துண்டாக வெட்டி பலி கொடுத்த பாசமிகு தந்தை.!


Madhya Pradesh Fathers Kills his Daughter Abused Man

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரனை, சிறுமியின் தந்தை இரண்டு துண்டாக வெட்டிக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், கந்தாவா மாவட்டத்தின் அஜ்னல் ஆற்றில் அடையாளம் தெரியாத ஒரு உடல் மிதந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, இரண்டு துண்டாக மிதந்து கொண்டிருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பரிசோதனையில் அந்த உடல் 50 வயதுடைய ஆணின் சடலம் என்பது தெரியவந்துள்ளது. இவர் அப்பகுதியை சேர்ந்த திரிலோக் சந்த் என்பதும் அம்பலமானது. இதனையடுத்து திரிலோக் சந்தின் கொலைக்கான காரணம் தொடர்பாக காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

Madhya pradesh

விசாரணையில், காமுகன் திரிலோக் சந்த் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. இது குறித்து அறிந்த சிறுமியின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் கடுமையான கோபத்தில் இருந்து வந்துள்ளனர். அவரை கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், தக்க சமயம் வந்ததும் ஆத்திரத்தில் இருந்த உறவினர்கள் மற்றும் சிறுமியின் தந்தை மீன் வெட்ட பயன்படுத்தும் கத்தியை கொண்டு திரிலோக் சந்தின் உடலை இரண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து, சிறுமியின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்துள்ளனர்.