மூர்ச்சையான பாம்புக்கு வாயோடு வாய்வைத்து சிபிஆர்; பாராட்டுகளை குவிக்கும் காவலரின் மனிதாபிமான செயல்..! உயிர்பிழைத்த பாம்பு.!

மூர்ச்சையான பாம்புக்கு வாயோடு வாய்வைத்து சிபிஆர்; பாராட்டுகளை குவிக்கும் காவலரின் மனிதாபிமான செயல்..! உயிர்பிழைத்த பாம்பு.!



Madhya Pradesh Cop CPR to Snake Save Life 

 

டிஸ்கவரி சேனல் பார்த்ததால் பாம்புக்கு உயிர்கொடுத்த காவலரின் துணிச்சல் செயல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள நர்மதாபுரம் பகுதியில் இருக்கும் வீட்டிற்குள் பாம்பு நுழைந்துள்ளது. பாம்பு பைப்லைனில் நுழைந்த காரணத்தால், வீட்டின் உரிமையாளர் மற்றும் குடியிருப்புவாசிகள் பூச்சிக்கொல்லி மருந்தை நீருடன் கலந்து பைப்லைனில் ஊற்றியுள்ளனர்.

மயங்கிப்போன பாம்பு பைப்புக்குள் சுருண்டு கிடைக்க, என்ன செய்வது என தெரியாத மக்கள் காவல் துறையினருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்த காவலர் அதுல் சர்மா, பாம்பை மீட்டு வாயுடன் வாய் வைத்து ஊத்தி மூச்சுக்கொடுத்தார்.

உள்ளூர் மக்களால் விஷத்தன்மை இல்லாத பாம்பாக கணிக்கப்படும் பாம்பை, காவலர் விரைந்து காப்பாற்றியது பலரிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது. மேலும், இவ்வாறான செயல்களை டிஸ்கவரி சேனலை பார்த்து கற்றுக்கொண்டேன் எனவும், பல பாம்புகளை நான் காப்பாற்றி இருக்கிறேன் எனவும் காவலர் தெரிவித்தார்.