குர்கானி ஊர்வசியின் விடாமுயற்சிக்கும் கிடைத்த வெற்றி என்ன தெரியுமா? மெய்சிலிர்க்க வைக்கும் தகவல்!

குர்கானி ஊர்வசியின் விடாமுயற்சிக்கும் கிடைத்த வெற்றி என்ன தெரியுமா? மெய்சிலிர்க்க வைக்கும் தகவல்!


kurkaani-urvachi

குர்கானை பகுதியை சேர்ந்த ஒரு பெண் தான் ஊர்வசி. இவரது கணவர் பிரபல உற்பத்தி நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருந்துள்ளார். ஒருநாள் அவர் தவறி விழுந்து இடுப்பு முறிந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

தனது கணவரது இறப்புக்குப்பின் வருங்காலத்தைப் பற்றி கவலை கொண்ட ஊர்வசி, தெருவில் தள்ளுவண்டி உணவுக் கடை நடத்தலாம் என முடிவு செய்து ஆரம்பித்துள்ளார்.

kurkaani

ஆனால் ஆரம்பத்தில் அவரின் மாமியார் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவரின் குழந்தைகளும் கூட ரோட்டில் கடை வைப்பது சரிவராது என்று கூறியுள்ளனர்.ஆனால் தன் முடிவில் திடமாக இருந்து அதை நிறைவேற்றி உள்ளார்.மேலும்  அவர் ஒரு நாளைக்கு 2500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை  சம்பாதித்துள்ளார்.

அதன் மூலம் தற்போது ஊர்வசி "food joint "  என்ற ரெஸ்டாரன்ட் திறக்கும் அளவிற்கு பிரபலம் ஆகியுள்ளார். விடாமுயற்சி இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதற்கு ஊர்வசி ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.