#Big Breaking:  சென்னை வந்த கோரமண்டல் அதிவிரைவு இரயில் தடம்புரண்டு பயங்கர விபத்து; 50 பேர் படுகாயம்.. மக்கள் அச்சம்.!

#Big Breaking:  சென்னை வந்த கோரமண்டல் அதிவிரைவு இரயில் தடம்புரண்டு பயங்கர விபத்து; 50 பேர் படுகாயம்.. மக்கள் அச்சம்.!



kolkata-to-chennai-coromandel-express-train-accident

 


அதிவிரைவு இரயில் தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தில் 50 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிசாவில் இருக்கும் பலசூர் (Bahanaga, Balasore) பகுதியில் இன்று கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த  கோரமண்டல் அதிவிரைவு இரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இரயிலின் 7 பெட்டிகள் தடம்புரண்டுள்ள நிலையில், சரக்கு இரயில் மீது அதிவிரைவு இரயில் பெட்டிகள் ஏறியதாகவும் கூறப்படுகிறது.

புவனேஸ்வர் நகரில் இருந்து 21 கி.மீ தொலைவில் இவ்விபத்து நடைபெற்றுள்ள நிலையில், தகவல் அறிந்து மீட்பு படையினர் விரைந்துள்ளனர். மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்டமாக 50 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.