என்ன கொடுமை சாமி! முத்தம் கொடுக்க வந்தது ஒரு குத்தமா!கணவர் செய்த விபரீத செயல்
என்ன கொடுமை சாமி! முத்தம் கொடுக்க வந்தது ஒரு குத்தமா!கணவர் செய்த விபரீத செயல்
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் தஸ்லிமா என்ற இளம்பெண். இவர் அன்சாரி என்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில நாட்களில் அன்சாரியின் செயல்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த தஸ்லிமா கணவரை கண்கானித்துள்ளார். அதன் பிறகு தான் அன்சாரி வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது. அதனை அடுத்து தஸ்லிமா தன் கணவரிடம் கேட்டுள்ளார்.
உடனே அவரது கணவர் அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இப்படியே சென்று நிலையில் திடீரென ஒரு நாள் அன்சாரி தன் மனைவி தஸ்லிமாவிடம் தனக்கு முத்தம் தருமாறு கேட்டுள்ளார். உடனே தஸ்லிமாவும் ஆசையாக முத்தம் கொடுக்க வந்துள்ளார்.
அந்த சமயத்தை பயன்படுத்தி கொண்ட அன்சாரி தனது மனைவியின் நாக்கை கடித்து கத்தியால் வெட்டி எடுத்துள்ளார். இரத்த காயத்துடன் இருந்த தஸ்லிமாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் நாக்கை ஒட்ட வைத்துள்ளனர்.
இதனை பற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் அன்சாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.