லாரி - டூவீலர் மோதல்.. நொடியில் பரிதாபம்..! கல்லூரி மாணவர், மாணவி துடிதுடித்து பரிதாப மரணம்.!
லாரி - டூவீலர் மோதல்.. நொடியில் பரிதாபம்..! கல்லூரி மாணவர், மாணவி துடிதுடித்து பரிதாப மரணம்.!
கல்லூரியை முடித்துவிட்டு உணவகத்திற்கு சென்று சாப்பிட்டு திரும்பிய கல்லூரி மாணவர் - மாணவி, லாரி மோதிய விபத்தில் பரிதாபமாக பலியாகினர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், சாராக்கி பகுதியை சார்ந்த கல்லூரி மாணவி சுஷ்மா (வயது 21). இதே பகுதியை சார்ந்த கல்லூரி மாணவர் கௌசிக் (வயது 22). இவர்கள் இருவரும் தனியார் கல்லூரியில் பயின்று வந்தனர். நேற்று முன்தினம் வழக்கம்போல கல்லூரிக்கு சென்ற நிலையில், மாலையில் கௌசிக்கும், சுஷ்மாவும் சாப்பிட இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றுள்ளனர்.
உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டு இருந்த போது, பன்னரகட்டா கெம்பநாயக்கஹள்ளி சாலையில் இவர்கள் வந்துள்ளனர். அப்போது, இதே சாலையில் வந்த லாரி, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மாணவர்கள் பயணித்த இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த கௌசிக், சுஷ்மா தூக்கி வீசப்பட்ட நிலையில், பலத்த காயமடைந்த 2 பேரும் உயிருக்கு போராடியுள்ளனர். இவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இருவருமே நேற்று அதிகாலை நேரத்தில் பரிதாபமாகி உயிரிழந்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பன்னரகட்டா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், லாரி ஓட்டுனரின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாகவுள்ள லாரி ஓட்டுனருக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர்.