அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
இரவு நன்றாக பேசிவிட்டு உறங்க சென்ற 19 வயது இளம் பெண், காலையில் சடலமாக இருந்த அதிர்ச்சி சம்பவம்.! விசாரணையில் போலீசார் கைப்பற்றிய அதிர்ச்சி தகவல்.!
இரவு நன்றாக பேசிவிட்டு உறங்க சென்ற 19 வயது இளம் பெண், காலையில் சடலமாக இருந்த அதிர்ச்சி சம்பவம்.! விசாரணையில் போலீசார் கைப்பற்றிய அதிர்ச்சி தகவல்.!
அறைக்குள் உறங்க சென்ற 19 வயது 12 ஆம் வகுப்பு மாணவி அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் சங்கர் யாதவ். இவருக்கு 19 வயதில் ஜெயஸ்ரீ என்ற மகளும், 17 வயதில் மற்றொரு மகளும் உள்ளனர். இதில் மூத்த மகள் ஜெயஸ்ரீ 12 ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் இரவு உணவை முடித்துவிட்டு, தனது குடும்ப உறுப்பினர்களுடன் பேசிவிட்டு அறைக்குள் உறங்க சென்ற ஜெயஸ்ரீ அடுத்த நாள் காலை நீண்ட நேரமாகியும் கதவை தீரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஜெயஸ்ரீ தூக்கு மாட்டி தற்கொலை செய்து சடலமாக தொங்கியுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதவை உடைத்து மகளை மீட்டனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜெயஸ்ரீயின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இறப்பதற்கு முன் ஜெயஸ்ரீ எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அதில், அப்பாவுக்கு இந்த கடிதத்தை எழுதுவதாக குறிப்பிட்டிருந்த ஜெயஸ்ரீ, உன் மனைவியையும், மகளையும் எனக்கு பிடிக்கவில்லை.
வீட்டில் தனக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை, தன்னை யாரும் விரும்பத்திலை. அதனால் தான் தற்கொலை செய்துகொள்வதாக எழுதியுள்ளார். அதாவது, தனது தாய் மற்றும் சகோதரித்தான் தனது மரணத்திற்கு காரணம் என்பதுபோல் ஜெயஸ்ரீ அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை ஆதாரமாக கொண்டு போலீசார் ஜெயஸ்ரீயின் தாய் மற்றும் மகளை விசாரித்துவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.