கேப்டன் மகனின் படைதலைவன்.! 4 நாட்களில் செய்துள்ள வசூல் இவ்வளவா.! வெளிவந்த தகவல்!!
"அடப்பாவத்த..." கோழிக்கறி சமைக்காத மனைவிக்கு நேர்ந்த கொடூரம்... காவல்துறை விசாரணை.!

தெலுங்கானா மாநிலத்தில் கோழிக்கறி சமைக்காததால் மனைவி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .
தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டம் கில்ஷ்டம் பேட் பகுதியைச் சேர்ந்தவர் சாட்பெல்லி. இவரது மனைவி சங்கரம்மா. இவர் தனது மனைவியிடம் உறவிற்காக கோழிக்கறியை சமைக்க சொல்லி இருக்கிறார்.
ஆனால் அவரது மனைவி கோழிக்கறிக்கு பதிலாக கத்தரிக்காயை சமைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் கோடாரையால் தனது மனைவியை வெட்டி கொடூரமாக கொலை செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை சங்கரம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது.
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கோழிக்கறி சமைக்காததால் இருந்த ஆத்திரத்தில் கணவர் மனைவியை கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.