அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
அடக்கடவுளே... மனைவியின் தற்கொலையை தடுக்காமல் வீடியோ எடுத்த கணவர்... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்...
அடக்கடவுளே... மனைவியின் தற்கொலையை தடுக்காமல் வீடியோ எடுத்த கணவர்... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்...
உத்தரப்பிரதேச மாநிலம் குல்மோஹர் பகுதியை சேர்ந்தவர் வசிக்கும் சஞ்சய் குப்தா. இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சோபிதா குப்தா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் சஞ்சய் குப்தா மற்றும் சோபிதாவுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று மதியம் வழக்கம் போல் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் பயங்கர கோபத்தில் இருந்த சோபிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
சோபிதாவின் தற்கொலை முயற்சியை தடுக்காமல் சஞ்சய் குப்தா தனது செல்போனில் அதனை வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர் சோபிதாவின் பெற்றோருக்கு போன் செய்து சோபிதா தற்கொலை செய்து கொண்டதை கூறியுள்ளார்.
பெற்றோர்கள் ஓடி வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதிருக்கிறார்கள். என்ன நடந்தது ஏன் சோபிதா தற்கொலை செய்து கொண்டார் என்று மருமகனிடம் கேட்க, சஞ்சய் குப்தா தனது செல்போனில் எடுத்த அந்த வீடியோவை காட்டி இருக்கிறார். இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த சோபிதாவின் பெற்றோர் நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் சஞ்சய் குப்தாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.