சல்மான்கான் வீட்டில் துப்பாக்கியால் சுட்ட விவகாரம்; விசாரணை கைதி தற்கொலை.!
ஆசையாய் திருமணம் செய்த மனைவியை!.சகோதரர் மற்றும் 7 பேருடன் சேர்ந்து செய்த கொடூரம்!.
ஆசையாய் திருமணம் செய்த மனைவியை!.சகோதரர் மற்றும் 7 பேருடன் சேர்ந்து செய்த கொடூரம்!.
ஹரியானா மாநிலத்தில் 22 வயது நிரம்பிய பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன், செப்டம்பர் 12 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற மறுநாளே மனைவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
திருமணமான அடுத்த நாள், செப்டம்பர் 13 ஆம் தேதி மனைவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்துள்ளார் கணவர். மயக்கநிலையில் இருந்த மனைவியை கணவர், அவரின் சகோதரர் உட்பட 7 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
திருமணம் நடந்த மறுநாளே வாழ்க்கையை பறிகொடுத்த அந்த இளம்பெண் நடந்த கொடூரத்தை பற்றி அவரது தந்தையிடம் கூறியுள்ளார்.
மகள் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில், 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பபட்டு விசாரணை நடைபெற்ற வருகிறது.