குடும்பத் தகராறில் நடுவழியில் நடந்த பயங்கரம்.... கைது செய்யப்பட்ட கணவர்.!



husband-killed-his-wife-in-domestic-violence-police-arr

கர்நாடக மாநிலத்தில் குடும்பத்தகராறில்  மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம்  அதிர்ச்சியே ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டு  விசாரணை நடைபெற்று வருகிறது.

கர்நாடக மாநிலம் ராம் நகர் மாவட்டம்  கனகபுரா பகுதியைச் சேர்ந்தவர் முத்து ராஜு. இவருக்கும் அம்பிகா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவரது மனைவி அம்பிகா கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று இருக்கிறார்.

karnataka

இதனால் அவரை சமாதானம் செய்து அழைத்து வர தனது மனைவியின் ஊரான ஓசக்கோட்டைக்கு சென்று இருக்கிறார் முத்துராஜு. அங்கு சென்று மனைவியை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்திருக்கிறார். அப்போது வரும் வழியிலேயே இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.

மேலும் கீழே கிடந்த கட்டையை எடுத்து அவரது தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அம்பிகா  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அம்பிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்  மேலும் மனைவியை தாக்கி கொலை செய்த முத்துராஜ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.