வாட்ஸ் அப்பில் பேசி கொண்டிருந்த மனைவி!! திடீரென வீட்டிற்கு வந்த கணவன்! பின்னர் நடந்த கொடூர சம்பவம்!

வாட்ஸ் அப்பில் பேசி கொண்டிருந்த மனைவி!! திடீரென வீட்டிற்கு வந்த கணவன்! பின்னர் நடந்த கொடூர சம்பவம்!


husband killed his wife


உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவை சேர்ந்த அஞ்சலி என்ற பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அஞ்சலி சில தினங்களுக்கு முன்னர் தனியாக வாட்ஸ் அப்பில் போன் பேசி கொண்டிருந்தார்.

அப்போது அவரது கணவர் திடீரென வீட்டிற்குள் வந்துள்ளார். இதனையடுத்து அஞ்சலி உடனே போனை துடித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவரது கணவர் அஞ்சலியின் போனை வாங்கி பார்த்த போது கடைசியாக பேசிய நம்பர் ஆண் ஒருவரின் பெயரில் இருந்துள்ளது.

Whatsapp

இதனால் கோபமடைந்த அஞ்சலியின் கணவர் வேறு ஆணுடன் எதற்காக பேசுகிறாய் என கேட்டு திட்டியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் அஞ்சலியின்  வாயில் கொசு மருந்தை எடுத்து ஊற்றி, கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு உவிரைந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து அஞ்சலியின்  கணவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.