மனைவியை கொன்று 300 துண்டுகளாக வெட்டி, டிபன்பாக்ஸில் அடைத்த கணவர்! ஆடிப்போன நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!
மனைவியை கொன்று 300 துண்டுகளாக வெட்டி, டிபன்பாக்ஸில் அடைத்த கணவர்! ஆடிப்போன நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!
ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் சோம்நாத் பரிதா. முன்னாள் இராணுவ மருத்துவர் ஆவார். இவரது மனைவி உஷா சமலை. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு தனது மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் மனைவியின் தலையில் அடித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் அவருடைய உடலை 300 சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, சிறிய டிபன் பாக்ஸ்களில் அடைத்து வைத்துள்ளார். மேலும் அந்த உடலிலிருந்து துர்நாற்றம் வெளியே வந்துவிடக்கூடாது என அதன் மீது பினாயிலை ஊற்றியுள்ளார்.
இதற்கிடையில் வெளிநாட்டில் இருந்த அவரது பிள்ளைகள் தொடர்ந்து போன் செய்துள்ளனர். ஆனால் அவர்களது அம்மா பேசாததால், தங்களது உறவினர் ஒருவருக்கு தகவல் கொடுத்து அவரது வீட்டிற்கு சென்று பார்க்க கூறியுள்ளார்.இந்நிலையில் அந்த நபர் நீண்ட நேரமாக கதவை தட்டியும் சோம்நாத் பதில் கொடுக்கவில்லை. உடனே அந்த நபர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார். அப்போது வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததால் சந்தேகமடைந்த அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் , வீட்டில் சோதனை செய்து உடல் பாகங்களை கைப்பற்றினர். மேலும் முதலில் மனைவி தற்கொலை செய்துகொண்டதாக கூறிய சோம்ராத் பின்னர் தான் கொலை செய்ததை ஒப்புகொண்டார்.
இந்த வழக்கானது நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தற்போதுநீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், ரூ .50,000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டது.