கள்ளகாதலனால் கர்ப்பமடைந்த மனைவி.. கோபத்தில் கணவன் செய்த கொடூர செயல்.!

கள்ளகாதலனால் கர்ப்பமடைந்த மனைவி.. கோபத்தில் கணவன் செய்த கொடூர செயல்.!


husband-killed-his-pregnant-wife

கணவர் கண்டித்தும் கேட்காமல் கள்ளக்காதலுடன் பழகி கர்ப்பமாகிய மனைவியை, கணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா ஒய். எஸ்.ஆர் மாவட்டம் கோடுமால்லு, ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதரவள்ளி. இவர் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஜித்தலூரில் வசித்து வந்த  ஷேக் முன்னியை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்து இறந்துவிட்டது.

இந்நிலையில், மனைவி ஷேக் முன்னி அந்த பகுதியில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார். அவர் வேலை செய்த அதே சூப்பர் மார்க்கெட்டில் மகபூப் உசேன் என்பவரும் வேலை செய்து செய்துள்ளார். தொடர்ந்து மகபூப் உசேன் மற்றும் ஷேக் முன்னி ஆகிய இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்ததால் நண்பர்களாக பழகி உள்ளனர். இந்த பழக்கம் சிறிது நாட்களில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இது குறித்து அறிந்த பெண்ணின் கணவர், தனது மனைவி மற்றும் மகபூப் உசேனை  கண்டித்துள்ளார்.

இருப்பினும் அதனை கண்டுக்காத ஷேக் முன்னி தனது கள்ளக்காதலை மீண்டும் தொடர்ந்துள்ளார். மேலும், கள்ளக்காதலால் ஷேக் முன்னி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனையறிந்த மாதரவள்ளி தன்னுடைய இரண்டு போலீஸ் நண்பர்கள் உட்பட 11 பேருடன் சேர்ந்து ஷேக் முன்னியை கடத்தியுள்ளனர். அத்துடன் அவரை ஒரு வீட்டில் அடைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Murder

மேலும், அவர் இறந்த பின் அங்குள்ள வயலில் வீசிவிட்டு தான் எதுவும் செய்யவில்லை என்பது போல ஒன்றுமே தெரியாத மாதிரி அங்கிருந்து சென்று விட்டனர். இது தொடர்பாக கோடுமால்லு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய பின் விசாரணை மேற்கொண்டனர்.

உடற்கூறு ஆய்வில் பெண்ணின் வயிற்றில் ஆண் சிசு இருப்பது தெரியவந்தது. மேலும், விசாரணையில் அவரது கணவர் அவரின் நண்பர்களுடன் சேர்ந்து ஷேக் முன்னியை கடுமையாக தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதனால் மாதரவள்ளி மற்றும் அவரின் 2 போலீஸ் நண்பர்கள் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.