விவாகரத்தான மனைவியை வீட்டிற்கு அழைத்துச் சென்று கணவர் செய்த மோசமான காரியம்! அங்கு வந்த தந்தை கண்ட அதிர்ச்சி காட்சி!
விவாகரத்தான மனைவியை வீட்டிற்கு அழைத்துச் சென்று கணவர் செய்த மோசமான காரியம்! அங்கு வந்த தந்தை கண்ட அதிர்ச்சி காட்சி!
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜஸ்விதர் சிங். இவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் மூத்த மகளான 26 வயது நிறைந்த மஞ்சிதர் கவுர், பெரோஸ்பூர் அருகே கட்டிவாலா என்ற கிராமத்தைச் சேர்ந்த சுகந்தீப் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு குடிப்பழக்கத்திற்கு அடிமையான சுகந்தீப், நாள்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் மனமுடைந்த மஞ்சிதர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அவரை விவாகரத்து செய்து, பிரிந்து தனது தந்தையுடன் வசித்து வந்தார்.
பின்னர்அவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தும் வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் மஞ்சிதர் பணிபுரியும் அலுவலகத்தில் இருந்து அவரது தந்தைக்கு போன் செய்த நிறுவன உரிமையாளர், உங்களது மகளை சுகந்தீப் வந்து அழைத்துச் சென்றுவிட்டார் என கூறியுள்ளார். இந்நிலையில் சந்தேகமடைந்த ஜஸ்விதர் பதறியடித்துகொண்டு, சுகந்தீப் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு சுகந்தீப் தனது ஆடையில் இரத்த கறைகளுடன், கையில் கூர்மையான ஆயுதத்துடன் நின்று கொண்டிருந்துள்ளார். மேலும் ஜஸ்விதரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜஸ்விதர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, மஞ்சிதர் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மஞ்சிதர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், மஞ்சிதருக்கு இரண்டாவது திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், இதனால் கோபமடைந்த சுகந்தீப் மஞ்சிதரை ஏமாற்றி அழைத்து சென்று கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவாகியுள்ள சுகந்தீப்பை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.