மனைவிக்காக யாசகம் பெற்று மோட்டார்சைக்கிள் வாங்கிய கணவர்.. இதுதான் காரணமா?..! நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்..!

மனைவிக்காக யாசகம் பெற்று மோட்டார்சைக்கிள் வாங்கிய கணவர்.. இதுதான் காரணமா?..! நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்..!



handicapped-husband-surprised-his-wife

மாற்றுத்திறனாளி கணவர் ஒருவர் தனது மனைவிக்காக 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் வாங்கி பரிசளித்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிந்த்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் ஒரு மாற்றுத்திறனாளி.  இதற்கு முன்பு இவர் மூன்று சக்கர சைக்கிள் வைத்திருந்ததால், இவரது மனைவி முதுகு வலி ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.

Madhya pradesh

இதனால் கடந்த நான்கு வருடங்களாக இருவரும் யாசகம் பெற்ற பணத்தை சேமித்து வைத்த சந்தோஷ்குமார், மனைவிக்காக பல திட்டங்களை தீட்டியுள்ளார்.தற்போது திட்டத்தை நிறைவேற்றும் வகையில் 4 வருடங்களாக சேமித்து வைத்த 90 ஆயிரம் பணத்தை வைத்து தனது மனைவிக்காக புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார்.

மனைவிக்காக கணவர் ஒருவர் நான்கு வருடங்களாக யாசகம் பெற்று மோட்டார்சைக்கிள் வாங்கித்தந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.