படுக்கையறையில் புகுந்த கொழுந்தனார்கள்! திருமணமாகி ஆசையோடு சென்ற இளம் பெண்ணுக்கு அடுத்தடுத்தாக காத்திருந்த பேரதிர்ச்சி!
படுக்கையறையில் புகுந்த கொழுந்தனார்கள்! திருமணமாகி ஆசையோடு சென்ற இளம் பெண்ணுக்கு அடுத்தடுத்தாக காத்திருந்த பேரதிர்ச்சி!
உத்தரபிரதேச மாநிலம் புடான் மாவட்டத்தில், கோட்வாலி சஹாஸ்வான் பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் புதிதாக திருமணமான நிலையில் தனது கணவர், மாமனார் மாமியார் மற்றும் இரு மைத்துனர்களுடன் வசித்து வந்துள்ளார். அவர் திருமணமாகி வந்த சில நாட்களிலேயே அவரை மாமனார், மாமியார் அதிக வரதட்சணை கேட்டு பயங்கரமாக கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி அந்தப் பெண்ணின் கணவரின் சகோதரர்கள் இருவரும் அவரை பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளனர். ஆனால் அதனை கணவர் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தனக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து அப்பெண் தனது தந்தையிடம் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் கணவனின் வீட்டில் உள்ள அனைவரும் அந்தப் பெண்ணை பயங்கரமாக அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும், உடலில் பல பகுதிகளில் சூடு வைத்தும் கொடுமைப் படுத்தியுள்ளனர். இதுகுறித்து பெண்ணின் தந்தைக்கு தெரியவந்த நிலையில் அங்கு விரைந்த அவர் மகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மேலும் பெண்ணின் கணவர் வீட்டார் அனைவரின் மீதும் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் புகாரை ஏற்ற போலீஸார் வழக்குபதிவு செய்து பெண்ணின் கணவர் மற்றும் மைத்துனர்களை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.