காதலை கைவிட்டு வேறொரு இளைஞரை திருமணம் செய்த காதலி.. 6 துண்டாக்கி கிணற்றில் வீசிய காதலன்.. நடந்த பயங்கரம்.!

காதலை கைவிட்டு வேறொரு இளைஞரை திருமணம் செய்த காதலி.. 6 துண்டாக்கி கிணற்றில் வீசிய காதலன்.. நடந்த பயங்கரம்.!


girl-murdered-by-her-ex-lover

தன்னுடன் கொண்ட காதலை கைவிட்டு வேறொரு இளைஞரை திருமணம் செய்த காதலியை, கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்று 6 துண்டுகளாக வெட்டி கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அசம்கர் பகுதியை சேர்ந்த பெண்மணி ஆராதனா. இவர் சம்பவத்தன்று உறவினருடன் கோவிலுக்கு சென்ற பின்னர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். 

இதற்கிடையில், அங்குள்ள கிணற்றில் பெண்ணின் சடலம் துண்டாக்கப்பட்டு 3 நாட்கள் ஆகியதுபோல அழுகி மிதப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

விசாரணையில், 6 துண்டுகளாக உடல் வெட்டப்பட்டு ஆராதனா கொலை செய்யப்பட்டதும், பிரின்ஸ் யாதவ் என்பவர் கொலை செய்திருப்பதும் அம்பலமானது. அதாவது, யாதவும் - ஆராதனாவும் காதலித்து வந்துள்ளனர். 

UttarPradesh

ஆனால், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஆராதனா காதலருடன் கொண்ட சண்டையால், அவரை கைவிட்டு வேறொரு இளைஞரை திருமணம் செய்துகொண்டார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் யாதவ் தனது உறவினர்கள் 2 பேருடன் ஆராதனாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, சம்பவத்தன்று (நவம்பர் 15) கோவிலுக்கு சென்று வந்த ஆராதனாவை வீட்டில் இறக்கி விடுவதாக தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பயணம் செய்த யாதவ், ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள கரும்பு தோட்டத்தின் கிணற்றுப்பகுதிக்கு உறவினர் உதவியுடன் கடத்தி சென்று காதலியை 6 துண்டுகளாக வெட்டி கொலை செய்து உடலை கிணற்றில் வீசி தப்பி சென்றுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பான தகவல் அம்பலமாகவே, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆராதனாவை கொலை செய்ததாக பிரின்ஸ் யாதவ், அவரின் உறவினர் சர்வேஷ் உட்பட 4 பேரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.