திடீரென ஏற்பட்ட தீ விபத்து..! 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பரிதாப பலி.!



fire accident in rajasthan

ஜெய்ப்பூரில் எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜாம்வா ராம்கரில் எண்ணெய் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த தொழிற்சாலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதுகுறித்து போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பெயிண்ட் செய்ய பயன்படுத்தப்படும் டர்பெண்டைன் ஆயில் பேக்கிங் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ​​தீ விபத்து ஏற்பட்டகாக கூறப்படுகிறது. மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.