மும்பையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.! பொதுமக்கள் பலர் பாதுகாப்பாக வெளியேற்றம்.! அதிர்ச்சி வீடியோ.!

மும்பையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.! பொதுமக்கள் பலர் பாதுகாப்பாக வெளியேற்றம்.! அதிர்ச்சி வீடியோ.!



fire accident in mumbai

மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பையில் உள்ள நகபடா என்ற நகரில் சிட்டி செண்டர் மால் என்ற வணிக வளாகம் அமைந்துள்ளது. அந்த மாலில் நேற்று வியாழக்கிழமை (அக்டோபர் 22) இரவு 8.15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதலில் லேசாக பற்றிய தீ, பிறகு கொழுந்து விட்டு எரிந்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 

இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு இயந்திரங்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டன. தீ விபத்து ஏற்பட்ட மாலின் அருகில் இருந்த 55 மாடிகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்த மக்கள்  சுமார் 3 ஆயிரத்து மேற்பட்டோர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

 

தீயை அணைக்கும் பணியின் போது தீ அணைப்பு வீரர்கள் இருவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக மும்பையின் ஜே.ஜே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.