மருமகளை பலாத்காரம் செய்த மாமனார்!. கண்டுகொள்ளாத கணவனும், தாயும்! மனைவி எடுத்த விபரீத முடிவு!.

மருமகளை பலாத்காரம் செய்த மாமனார்!. கண்டுகொள்ளாத கணவனும், தாயும்! மனைவி எடுத்த விபரீத முடிவு!.



father-in-law-raped-son-wife


மத்திய பிரதேசம் போபால் பகுதியை இருந்த 20 வயதான இளம்பெண் கடந்த ஜூன் மாதம், அதே பகுதியை சேர்ந்த நபரை திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்த நாளிலிருந்தே அவருடைய மாமனார், இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மருமகளை, கட்டாயப்படுத்தி மாமனார் சீரழித்துள்ளார். இதனை பற்றி உடனடியாக மருமகள் மாமியாரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் இதைப்பற்றி வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என மருமகளை மிரட்டியுள்ளார்.

வேறுவழியின்றி  கணவனிடம் அந்த பெண் கூறியுள்ளார். ஆனால் அவரும் இந்த விஷயத்தை யாரிடமாவது கூறினால் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

husband and wife

மனமுடைந்த மனைவி செல்போனில் நடந்தவை பற்றி தன்னுடைய தாயிடம் கூறியுள்ளார். இதனை மறைந்திருந்து கேட்ட கணவன் செல்போனை வாங்கி உடைத்துவிட்டு, மனைவியை சரமாரியாக தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளான்.

இந்த நிலையில் தாய் வீட்டிற்கு திரும்பிய இளம்பெண், தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனையடுத்து பெண்ணிண் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.