அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
வீங்கிய முகத்துடன் மருத்துவமனைக்கு சென்ற பெண்! பரிசோதனையில் காத்திருந்த பேரதிர்ச்சி!!
வீங்கிய முகத்துடன் மருத்துவமனைக்கு சென்ற பெண்! பரிசோதனையில் காத்திருந்த பேரதிர்ச்சி!!
கேரளா மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீங்கிய முகத்துடன் மருத்துவர்களை சந்தித்துள்ளார். தீவிர பரிசோதனைக்கு பிறகு அந்த பெண்ணின் உடலில் இருக்கும் ஒருவகை புழுவை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனை அடுத்து அறுவை சிகிச்சை மூலம் அந்த புழு அகற்றப்பட்டு பின்னர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பரிசோதனை முடிந்து புழுவின் விவரம் வெளியானதும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், நாய்களில் மட்டுமே இருக்க கூடிய dog heartworm என்ற புழுதான் அந்த இளம் பெண்ணின் உடலில் இருந்துள்ளது.
கொசுக்கள் மூலம் நாய்களிடம் இருந்து இந்த புழுக்கள் மனிதர்களை தொற்றிக்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும், நுண்ணிய கிருமிகளின் இருந்து இவை புழுவாக வளரும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்னனர்.
மேலும், சரியாக வேகாத மாமிச உணவுகளை சாப்பிடுவதன் மூலமும் இதுபோன்ற கிருமிகள் தோற்றும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.