#Breaking: திப்ரூகர் - கன்னியாகுமரி அதிவிரைவு இரயில் வண்டியில் திடீர் புகை; அலறியபடி இரயிலில் இருந்து கீழே குதித்த பயணிகள்..!

#Breaking: திப்ரூகர் - கன்னியாகுமரி அதிவிரைவு இரயில் வண்டியில் திடீர் புகை; அலறியபடி இரயிலில் இருந்து கீழே குதித்த பயணிகள்..!



Dibrugarh Kanyakumari Vivek Express Train Smoke due to Sack Stuck with Wheel 

 

அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகர் - கன்னியாகுமரி இடையே விவேக் விரைவு இரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தஇரயில் இன்று ஒடிசா மாநிலத்தில் உள்ள பிரஹ்மபுர் பகுதியில் வந்தது.

அப்போது, இரயில் நிலையத்திற்கு முன்பு ரயிலின் சக்கரத்தில் சாக்குப்பை சிக்கிக்கொண்டது. இதனால் இரயில் மேற்படி செல்ல இயலாமல் சக்கரத்துடன் உராய்ந்து திடீர் புகை கிளம்பியது. 

இதனால் பயணிகள் அலறவே, இரயிலில் தீ பிடித்துவிட்டதாக எண்ணி அபாய சங்கிலியை பிடித்து இழுத்து அவசர கதியில் இரயில் நிறுத்தப்பட்டுள்ளது. 

இரயில் நடுவழியில் நின்றதால் பிற பயணிகளும் பீதியடைய, புகையை கண்ணில் கண்டதும் அனைவரும் பதறியபடி தங்களின் உடமைகளை எடுத்துக்கொண்டு இரயிலில் இருந்து கீழே இறங்கினர். 

தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் இரயில்வே அதிகாரிகள் சக்கரத்துடன் சிக்கியிருந்த சாக்கை தீயை அணைத்து மீட்டனர். இதனால் இரயில் தாமதமாக 30 நிமிடங்களுக்கு பின் புறப்பட்டு சென்றது.