காஷ்மீரில் எல்லை பாதுகாப்பில் ஈடுபடும் தோனி! இந்திய ராணுவம் அதிகாரபூர்வ அறிவிப்பு

காஷ்மீரில் எல்லை பாதுகாப்பில் ஈடுபடும் தோனி! இந்திய ராணுவம் அதிகாரபூர்வ அறிவிப்பு



Dhoni serves with army in kashmir

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தற்போது 2 மாத ஓய்வு கேட்டு இந்திய ராணுவத்தில் தனது நேரத்தை செலவிடப்போகிறார். இதில் 15 நாட்கள் காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட்ட உள்ளார். 

உலக்கோப்பை தொடருக்கு பிறகு தோனி இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து 2 மாதங்கள் ஓய்வு எடுத்துள்ளார். இந்த காலக்கட்டத்தில் அவர் ஏற்கனவே பதவியில் இருக்கும் துணை ராணுவ படையில் சேவை செய்ய உள்ளார். 

MS Dhoni

பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் கௌரவ லெப்டினன்ட் கர்னலாக இருந்து வருகிறார். தோனி தற்போது பெங்களூரில் இருக்கும் ராணுவ மையத்தில் ராணுவ வீரர்களுடன் வசித்து வருகிறார். 

MS Dhoni

வரும் ஜூலை 31 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை காஷ்மீரில் உள்ள பாரா பட்டாலியன் ராணுவத்தினருடன் ரோந்து பணியிலும் எல்லை பாதுகாப்பிலும் ஈடுபட உள்ளார். மேலும் இந்த 15 நாட்களும் காஷ்மீரில் இருக்கும் ராணுவ வீரர்களின் முகாமில் தான் தங்கவுள்ளார்.