20 வயது இளம்பெண்ணை கற்பழித்து, கொன்று உடலை காரில் கட்டி இழுத்து வந்த கும்பல்?.. டெல்லியில் பாஜக பிரமுகர் உட்பட 5 பேர் கைது.!
20 வயது இளம்பெண்ணை கற்பழித்து, கொன்று உடலை காரில் கட்டி இழுத்து வந்த கும்பல்?.. டெல்லியில் பாஜக பிரமுகர் உட்பட 5 பேர் கைது.!
வேலையை முடித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிய பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றசாட்டு எழுந்து மீண்டும் டெல்லியை அதிரவைத்துள்ளது.
டெல்லி சுல்தான்பூரியை சேர்ந்த அஞ்சலி சிங் (வயது 20) என்ற இளம்பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இரவு நேர வேலையை முடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துகொண்டு இருந்தார். இதற்கிடையில், அவரின் சடலம் அரைநிர்வாண கோலத்தில் சாலையோரம் மீட்கப்பட்டது.
இந்த விஷயம் தொடர்பாக சுல்தான்பூரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், புத்தாண்டு இரவில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த இளம்பெண் கார் விபத்தில் சிக்கியுள்ளார். காரை இயக்கியவர்கள் பெண்ணை சுமார் 4 கி.மீ தூரம் சாலையில் இழுத்து சென்றுள்ளனர். இதனால் அவரின் உயிர்பறிபோனது தெரியவந்தது.
CCTV footage of #delhigirl killed on Sunday goes viral.
— Jyotsana Melbourne (@JyotsanaMelborn) January 2, 2023
It's a clear case of rape and murder. #Delhiaccident pic.twitter.com/jXv38bFlWy
சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்து பாஜக பிரமுகர் மனோஜ் மிட்டல், கிருஷ்ணா, தீபக் கண்ணா, அமித் கண்ணா, மித்து ஆகிய 5 பேரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை விபத்து எனவே தற்போது வரை கூறி வருகின்றனர்.
ஆனால், பெண்ணின் மரணத்தை விபத்தாக கருத மறுத்துவிட்ட குடும்பத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர், அஞ்சலி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது. இதனால் டெல்லியில் மீண்டும் பரபரப்பு சூழல் ஏற்பட்டுள்ளது.