ஆசையாக வளர்த்த மகள்! ஒரு வருட காதலுக்காக அவர் செய்துள்ள காரியத்தை பாருங்கள்.

ஆசையாக வளர்த்த மகள்! ஒரு வருட காதலுக்காக அவர் செய்துள்ள காரியத்தை பாருங்கள்.


Daughter mixed poison in food

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நான்ஹே சிங். இவர் தனது உறவினர் ஒருவரின் வீட்டில் நடந்த இறுதிச்சடங்கு நிகழ்விற்கு சென்றுவிட்டு தந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டிற்கு திரும்பிய அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் இருந்த அனைவரும் மயக்கமான நிலையில் உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்னனர்.

இதனால் அவர்களை உடனே மருத்துவமனையில் அனுமதித்துள்ளார் நான்ஹே சிங். அனைவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் கூறுகையில் அனைவரும் சாப்பிட உணவில் விஷம் கலந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

Crime

நான்ஹே சிங் மகள் கடந்த ஒருவருடமாக இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், தாங்கள் அந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும் தங்கள் மகள் உணவில் விஷம் கலந்துவிட்டு அந்த நபருடன் ஓடிவிட்டதாக நான்ஹே சிங் போலீசாரிடம் கூறியுள்ளார். மேலும், அந்த இளைஞர்தான் உணவில் விஷத்தை கலக்க சொல்லி தங்கள் மகளிடம் கூறியிருக்கலாம் எனவும் நான்ஹே சிங் போலீசில் கூறியுள்ளார்.

இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள நான்ஹே சிங்கின் மகள் மற்றும் அவரது காதலன் இருவரையும் தேடிவருகின்றனர்.