முதல்முறையாக ஒரே நாளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி!

முதல்முறையாக ஒரே நாளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி!



corona increased in india

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இந்தியாவில் முதன்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில்  750-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிகை 34,968 ஆக அதிகரித்துள்ளது.

corona

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 32,553 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை மொத்தம் 15,83,792 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய அளவில் அதிக பாதிப்புடைய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 3,741 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,34,114 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,72,883 பேர் குணமடைந்துள்ளனர்.