வயிறு வலிப்பதாக கூறிவிட்டு விடுதிக்கு சென்ற கல்லூரி மாணவி! திரும்பி வந்த தோழிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி.

வயிறு வலிப்பதாக கூறிவிட்டு விடுதிக்கு சென்ற கல்லூரி மாணவி! திரும்பி வந்த தோழிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி.


College student suicide for English

ஆந்திராவை சேர்ந்த அனந்தபூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் லிங்கராஜு. இவரது மகள் காவியா. 20 வயதான காவியா ஆந்திராவில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் பயின்றுவந்துள்ளார். இந்நிலையில் புதன்கிழமை காலை, வகுப்பறையில் இருந்த காவியா திடீரென வயிறு வலிப்பதாக கூறிவிட்டு விடுதிக்கு சென்றுள்ளார்.

கல்லூரி முடிந்ததும் காவியாவின் தோழிகள் விடுதியில் சென்று பார்த்தபோது காவியா தனது அறையில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவியாவின் தோழிகள் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.

suicide

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காவியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்த விசாரணையில் காவியா சிறுவயதில் இருந்தே தெலுங்கு மொழியில் படித்து வந்ததாகவும், கல்லூரியில் அவரால் ஆங்கிலத்தை பின்பற்றமுடியாததாலும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் காவியா தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.