பைக்கில் தனியாக பறந்த குழந்தை, இறுதியில் நேர்ந்த அதிசயம், பெற்றோர்களுக்கு நேர்ந்தது என்ன ? வெளியான அதிரவைக்கும் வீடியோ .!

பைக்கில் தனியாக பறந்த குழந்தை, இறுதியில் நேர்ந்த அதிசயம், பெற்றோர்களுக்கு நேர்ந்தது என்ன ? வெளியான அதிரவைக்கும் வீடியோ .!



child-escape-from-bike-accident-in-bangalore

பெங்களூரில் நடைபெற்ற சாலை விபத்தில் பெற்றோர்கள் தூக்கி வீசப்பட்ட நிலையில்  எந்த வித பாதிப்பும் இல்லாமல் குழந்தை ஒன்று உயிர் தப்பிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் நெடுஞ்சாலையில் குழந்தையுடன் ஒரு தம்பதியினர் பைக்கில் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்பொழுது  தம்பதியினர் சென்ற பைக் தங்களுக்கு முன்னால் சென்ற வண்டியின் மீது மோதி தம்பதியினர் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்

ஆனால் குழந்தை  மட்டும் வந்த வேகத்தில் நிற்காமல் சென்ற பைக்கில் தனியாக சென்றது.

     accident

பின்னர் முன்னே சென்ற லாரியை கடந்து சாலையின் வலது பக்கத்தில் உள்ள டிவைடரில் மோதி கீழே விழுந்தது.

அதில்  வண்டியிலிருந்த குழந்தை எந்த பாதிப்பும் இல்லாமல் புல் தரையின் மீது விழுந்தது .பின்னர் அதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள்  ஓடி வந்து குழந்தையை தூக்கினர்.

 மேலும் நெடுஞ்சாலையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .