பள்ளி மாணவர்களை தண்டித்த 2 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு.!

பள்ளி மாணவர்களை தண்டித்த 2 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு.!



Case filed against teachers for punishment to students

தானே மாவட்டத்தில் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் மாணவர்களை தண்டித்த 2 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள உல்லாஸ்நகரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் கல்வி கட்டணம் குறித்த அறிவிப்பு படிவங்களில் பெற்றோரின் கையெழுத்து வாங்கி வருமாறு ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

maharashtra

இதில் மாணவர் ஒருவர் கையெழுத்து வாங்காமல் வந்ததால் அந்த மாணவனை வகுப்பு ஆசிரியை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் வகுப்பு முடியும் வரை மாணவரை பெஞ்சில் ஏறி நிற்க வைத்துள்ளார்.

அதேபோல் மற்றொரு ஆசிரியை 12 வயது மாணவனை வகுப்பு முடியும் வரை கைகளை உயர்த்தி நிற்க வைத்து தண்டனை கொடுத்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோர் ஆசிரியர்களுக்கு எதிராக போலீசில் புகார் அளித்த நிலையில், மாணவர்களை தண்டித்த 2 ஆசிரியர்கள் மீதும் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.