மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்! காருக்குள் உயிருக்கு போராடிய இருவர்! வைரல் வீடியோ!

மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்! காருக்குள் உயிருக்கு போராடிய இருவர்! வைரல் வீடியோ!



car in flood

தற்போது தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பி ஆறுகள் மற்றும் கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்தநிலையில் இரண்டு நபர்கள் ஒரு காரில் அனந்தபூர் மாவட்டம் ராஜபுரம் அருகே சென்றுகொண்டிருந்தனர்.அந்த இடத்தில் ஒரு கால்வாயில் வெள்ளம் பாய்ந்தோடியது. பாலத்திற்கு மேல் வெள்ளம் வேகமாக சென்று கொண்டிருந்ததால் காரில் சென்றவர்கள் எப்படி கடக்க போகிறோம் என்று நினைத்தவாறே சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அந்த வழியாக பேருந்து ஒன்று சென்றது. அப்போது கால்வாய் வெள்ளத்தில் பேருந்து வேகமாக கடந்து சென்று விட்டது. இதனைப்பார்த்த காரை ஓட்டிவந்தவர் நாமும் கடந்துவிடலாம் என நினைத்து பாலத்தை கடக்க முயற்சித்துள்ளார். ஆனால் தண்ணீரின் வேகம் காரை அடித்துச்சென்றது. காரில் இருந்தவர்களும் அடித்துச்செல்லப்பட்டனர்.

இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து, அந்த ஆற்றில் ஆழம் இல்லாததால் காரில் இருந்த இருவரையும் மீட்டனர். பலர் அந்த கார் அடித்துச்செல்லப்பட்டதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்தனர். இந்த காட்சி வலைதளங்களில் வைரலானதையடுத்து இருவரை காப்பாற்றிய கிராம மக்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.