கல்லூரி மாணவியை நடுரோட்டில்., வாலிபர் செய்த வெறிச்செயல்..! ஒருதலைக்காதலால் பகீர் சம்பவம்..!!

கல்லூரி மாணவியை நடுரோட்டில்., வாலிபர் செய்த வெறிச்செயல்..! ஒருதலைக்காதலால் பகீர் சம்பவம்..!!



boy-killed-a-collage-student-and-escaped

ஒரு தலைக்காதலால் கல்லூரி மாணவியை வாலிபர் கொலை செய்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் சன்னியாசிக்குப்பத்தில் உள்ள மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கீர்த்தனா. இவர் கலிதீர்த்தால் குப்பத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் கீர்த்தனாவை அவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த முகேஷ் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

ஒரு நாள் தனது காதலை முகேஷ் மாணவியிடம் தெரிவிக்கவே, அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் கீர்த்தனாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் தன்னை தவிர்த்து வேறு யாரிடமும் பேசக்கூடாது என்றும் மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 

மாணவி தனது காதலுக்கு மறுப்பு தெரிவித்ததை நினைத்து கோபத்திலிருந்த முகேஷ் நேற்று மாலை மாணவி கல்லூரி முடித்தபின் தனியார் பேருந்தில் சன்னியாசிகுப்பம் கடைவீதியில் இருந்து வீட்டிற்கு செல்ல முற்பட்டபோது, கழுத்து மற்றும் கைகால் பகுதிகள் சரமாரியாக வெட்டியுள்ளார்.

pudhuchery

இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த கீர்த்தனாவை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு மதகடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்த நிலையில், காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து வந்த திருபுவனை காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் கொலை செய்த முகேஷை வலை வீசி தேடி வருகின்றனர். முன்பே முகேஷு மீது மதுபான கடையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.