ஆணுறுப்பை அறுத்து ரோட்டில் வீசிய காதலி.. திருமணத்தை தள்ளிப்போட்டதால் பயங்கரம்.!

ஆணுறுப்பை அறுத்து ரோட்டில் வீசிய காதலி.. திருமணத்தை தள்ளிப்போட்டதால் பயங்கரம்.!



Bihar Women Cut off Love Boy Penis 

 

பீகார் மாநிலத்தில் உள்ள பக்ஸர் மாவட்டம், சதுரஸகன்ச் பகுதியில் வசித்து வரும் 25 வயது இளைஞர், பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். காதல் ஜோடிகள் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளது. 

இந்நிலையில், காதலி இளைஞரிடம் திருமணம் குறித்து பலமுறை கூறியும் பலன் இல்லை. ஆனால், பாலியல் ரீதியாக நெருங்கியதாகவும் தெரியவருகிறது. 

இதனால் ஒருகட்டத்தில் காதலர் தன்னை ஏமாற்றுவதாக உணர்ந்த பெண்மணி, அவருக்கு தக்க பாடம் புகட்ட நினைத்துள்ளார். வீட்டில் யாரும் இல்லை என காதலருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். 

அவரின் அழைப்பை பெற்று வந்த இளைஞர், இளம்பெண்ணின் வீட்டிற்குள் சென்றதும் அவரை இளைஞரின் காதலி மற்றும் அவரின் சகோதரர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். 

மேலும், காதலித்துவிட்டு திருமணத்திற்கு இழுத்தடித்த நபரின் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டு, சாலையோரம் மயக்க நிலையில் அவர் வீசப்பட்டு சென்றுள்ளார். 

சாலையோரம் உயிருக்கு போராடிய நபரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்கு பின் நடந்தது அம்பலமாகவே காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இளைஞரின் நிலையம் கவலைக்கிடமாக இருக்கிறது.