"என் விருப்பப்படி திருமணம் செய்யாத நீ சாவு" - மகளின் கழுத்தறுத்து கொன்ற தந்தை..! பரபரப்பு சம்பவம்.!!

"என் விருப்பப்படி திருமணம் செய்யாத நீ சாவு" - மகளின் கழுத்தறுத்து கொன்ற தந்தை..! பரபரப்பு சம்பவம்.!!


Bihar Gopalganj Father Kills 19 Aged Daughter She Reject Home Arranged Marriage

தந்தை பார்த்து வைத்திருந்த வரனை மகள் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தில் வசித்து வருபவர் இந்திரதேவ் ராம். இவர் விவசாயியாக இருந்து வருகிறார். இவரின் மனைவி கலாவதி தேவி. இந்த தம்பதிகளுக்கு கிரண் குமாரி என்ற 19 வயது மகள் இருக்கிறார். இந்நிலையில், மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த தந்தை, அதற்காக வரன் பார்த்து திருமண நிச்சயம் செய்துள்ளார். 

இந்த திருமணத்தில் கிரண் குமாரிக்கு விருப்பம் இல்லை. இதனால் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், அவர் மற்றொரு வாலிபரை காதலித்து வந்ததாகவும் கூர்பாடுகிறது. இந்த தகவலை அறிந்து ஆத்திரமடைந்த இந்திரதேவ் ராம், தனது 2 சகோதரர்களுடன் சேர்ந்து மகளை தான் பார்த்து வைத்துள்ள மணமகனை திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளார். 

தந்தையின் பேச்சுக்களை ஏற்றுக்கொள்ளாத மகள் தனது முடிவில் உறுதியாக இருக்கவே, ஆத்திரமடைந்த இந்திரதேவ் ராம் கிரண் குமாரியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். மகளின் உயிரை காக்க வந்த தாய்க்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. 

Bihar

இந்த விஷயம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கிரண் குமாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கலாவதி தேவியை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

கொலை சம்பவம் தொடர்பாக கலாவதி தேவியின் வாக்குமூலத்தை பெற்று புகார் பதிவு செய்த அதிகாரிகள், இந்திரதேவ் ராமை மற்றும் அவரின் சகோதரர்கள் 2 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.