பச்ச மண்ணை போயி... 6 வயது சிறுமி 15 வயது சிறுவனால் பலாத்காரம், கொலை.. உடந்தையாக இருந்த., பேரதிர்ச்சி சம்பவம்..!
பச்ச மண்ணை போயி... 6 வயது சிறுமி 15 வயது சிறுவனால் பலாத்காரம், கொலை.. உடந்தையாக இருந்த., பேரதிர்ச்சி சம்பவம்..!
வீட்டருகே விளையாடிக்கொண்டு இருந்த 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த 15 வயது சிறுவன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டான். மேலும், குற்றத்தை மறைக்க சிறுவனின் தந்தை மகனுக்கு உதவிய பயங்கரமும் நடந்துள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள சுல்தானிசேரா, ஹைலக்கண்டி பகுதியில் 6 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். கடந்த பிப். 9 ஆம் தேதி சிறுமி தனது வீட்டருகே சக தோழிகளுடன் விளையாடிக்கொண்டு இருந்த நிலையில் திடீரென மாயமாகியுள்ளார். அவரை பெற்றோர்கள் தேடி அலைந்தும் கிடைக்கவில்லை.
இதனால் சிறுமி மாயமானது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து சிறுமியை தேடி வந்த நிலையில், அங்குள்ள காட்டுப்பகுதியில் இருந்து சிறுமி கடந்த பிப். 12 ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுமியின் சடலத்தை உடற்கூறாய்வுக்காக அதிகாரிகள் அனுப்பி வைத்த போது, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இதனையடுத்து, காவல் துறையினர் விசாரணையை துரிதப்படுத்திய நிலையில், சிறுமியின் அண்டை வீட்டில் வசித்து வந்தவர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் செயல்பட்டுள்ளனர்.
இதனால் அந்த வீட்டில் இருந்த 15 வயது சிறுவனை காவல் துறையினர் அழைத்து விசாரணை செய்த போது, சிறுமியை 15 வயது சிறுவன் அழைத்து சென்று வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது அம்பலமானது. மேலும், சிறுமி கயவனின் கொடூரத்தால் மயங்கி சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, சிறுவனின் தந்தைக்கு விஷயம் தெரியவர, அவர் சிறுமியின் உடலை எங்காவது கொண்டு சென்று போட்டுவிடலாம் என முடிவெடுத்து, உடலை காட்டுப்பகுதியில் வீசி இருக்கிறார். இந்த கொடூர செயலை செய்த 15 வயது சிறுவன் மற்றும் அவரின் தந்தை ஆகியோரை பிப். 15 ஆம் தேதியான நேற்று கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.