அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருது.! எதற்காக தெரியுமா.?
பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருது.! எதற்காக தெரியுமா.?
அமெரிக்க அரசின் மிக உயரிய விருதான ‛லிஜியன் ஆப் மெரிட்' என்ற விருதை, பிரதமர் மோடிக்கு, அதிபர் டிரம்ப் வழங்கினார். இந்த விருதை, பிரதமர் மோடி சார்பில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து பெற்று கொண்டார்.
இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வெளியிட்ட அறிக்கையில், இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தியது, உலக அமைதிக்காக சேவை புரிந்ததற்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The award is in recognition of the PM’s steadfast leadership & vision for India's emergence as a global power, and exemplary contribution made by him for the advancement of India-United States strategic partnership & promoting global peace & prosperity: MEA https://t.co/vNFJXqGcAX pic.twitter.com/x3RDc4jLFK
— ANI (@ANI) December 22, 2020
லிஜியன் ஆப் மெரிட் என்ற உயரிய விருதானது, அமெரிக்க அதிபரால், மற்ற நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கு இந்த விருது ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.