மஹியங்கனை – பதுளை வீதியில் இன்று நடைபெற்ற கோர விபத்து - 10 பேர் உயிரிழப்பு

மஹியங்கனை – பதுளை வீதியில் இன்று நடைபெற்ற கோர விபத்து - 10 பேர் உயிரிழப்பு


accident in srilanka


மஹியங்கனை – பதுளை வீதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் இரட்டை பிள்ளைகள் உட்பட 10 பேர்  உயிரிழந்துள்ளனர்.

 
இந்த விபத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 56 வயதான ரெலின்டன் ஜோசப், அவரது மனைவி, அவர்களின் இரண்டு மருமகன்கள், மகள் இருவர், மூன்று பேத்தி மற்றும் ஒரு பேரன் உயிரிழந்துதுள்ளனர்.
 
இந்த குடும்பத்தில் 13 வயதான சேஹான் மட்டுமே  உயிர் தப்பி பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவர்களுடன் உறவுக்கார பிள்ளை ஒன்றும் காயத்துடன் சிசிக்சை பெற்று வருகின்றார்.
  accident
கடந்த திங்கட்கிழமை மட்டங்களப்பில் இருந்து வந்த இந்த குடும்பத்தினர் ஜாஎல, பின்னவல, உட்பட பல இடங்களுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளனர்.
 
இன்று மீண்டும் சொந்த ஊர் திரும்பும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த மூவர் சிறு காயங்களுடன் மஹியங்கனை வைத்தியசாலையில் சிசிக்சை பெற்று வருகின்றனர்.