நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து! 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து! 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!



9 person died in fire accident


டெல்லி கிராரி என்ற இடத்தில்  உள்ள துணிக்கிடங்கு ஒன்றில் நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்,  9 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்துள்ளனர். 

டெல்லியின் கிராரி பகுதியில் 3 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள துணிக்கிடங்கு ஒன்றில் நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 

இந்த கொடூர விபத்தில் உடல் கருகி 9 பேர் உயிரிழந்தனர். அதில் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது, தீ முழுவதுமாக அணைக்கப்பட்டுவிட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. 

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.