7 மாத கர்ப்பிணி திடீர் தற்கொலை! அடுத்து கணவர் செய்த அதிர்ச்சி காரியம்! ஏன்? என்னதான் நடந்தது??
7 மாத கர்ப்பிணி திடீர் தற்கொலை! அடுத்து கணவர் செய்த அதிர்ச்சி காரியம்! ஏன்? என்னதான் நடந்தது??
ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள பொலவக்காளிபாளையம் என்ற பகுதியை சேர்ந்தவர் கமல்பிரசாத். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த செல்வநாயகி என்பவருடன் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் செல்வநாயகி தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். அதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். மனைவி உயிரிழந்ததை அறிந்த கமல்பிரசாத் விஷம் குடித்துவிட்டு காரில் வேகமாக சென்று, தெக்கலூரில் லாரி மீது காரை மோதியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் செல்வநாயகி திருமணத்திற்கு முன்பு ஒருவரை காதலித்ததாகவும், அதனை அறிந்த பெற்றோர்கள் அவசரஅவசரமாக அவரை கமல் பிரசாத்திற்கு திருமணம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையிலேயே அண்மையில் அவரது காதல் விவகாரம் குறித்து கணவர் கமல் பிரசாத்திற்கு தெரியவந்த நிலையில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மனம் உடைந்து செல்வநாயகி தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.