வெள்ளத்தில் மிதக்கும் அசாம்.! உயிரையே உலுக்கும் குழந்தையின் ஒற்றை புகைப்படம்!! அதிரவைத்த பகீர் பின்னணி!!
வெள்ளத்தில் மிதக்கும் அசாம்.! உயிரையே உலுக்கும் குழந்தையின் ஒற்றை புகைப்படம்!! அதிரவைத்த பகீர் பின்னணி!!
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில் பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் பலத்த கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்மட்டம் உயர்ந்து அசாம் மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த மழையால் இதுவரை மொத்தம் 67 பேர் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் பேர் வீடு உடமைகளை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர் . மேலும் வெள்ளத்தால் ஏராளமான வன விலங்குகளும் உயிரிழந்துள்ளது.
இதனையடுத்து அங்கு நிவாரண பணிகள் தீவிரமடைந்து வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனங்களும், பொதுமக்களும் உதவி வருகின்றனர்.
இந்நிலையில் அசாமில் வெள்ளத்தால் நெஞ்சை உலுக்கும் துயரசம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஷிடால்பட்டி என்ற இடத்தில் தனது 4 குழந்தைகளுடன் ராணி தேவி என்பவர் ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளார். பெருகி வரும் வெள்ளத்தினால் ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருந்துள்ளது. அப்போது அவரது குழந்தை ஒன்று ஆற்றுக்குள் தவறி விழுந்துள்ளது.
அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராணிதேவி தனது குழந்தையை காப்பாற்றுவதற்காக ஆற்றுக்குள் குதித்துள்ளார். இதனை கண்ட மற்ற மூன்று குழந்தைகளும் ஆற்றில் குதித்துள்ளனர்.
இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனே ஆற்றுக்குள் குதித்து தேடியுள்ளனர். இதில் ராணி தேவி மற்றும் ஒரு குழந்தை மட்டுமே காப்பாற்றமுடிந்த நிலையில் மற்ற 3 குழந்தைகளும் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டனர்.
இந்நிலையில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அர்ஜூன் என்ற 3 வயது குழந்தையின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பலரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது. பலரும் அந்த குழந்தைக்காக தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.