அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
பாத்ரூம் கண்ணாடியில் 14 சிறுமி எழுதி வைத்திருந்த அதிர்ச்சி வாக்கியம்..! அடுத்தடுத்து தாய் மற்றும் மகனுக்கு நேர்ந்த கொடூரம்.!
பாத்ரூம் கண்ணாடியில் 14 சிறுமி எழுதி வைத்திருந்த அதிர்ச்சி வாக்கியம்..! அடுத்தடுத்து தாய் மற்றும் மகனுக்கு நேர்ந்த கொடூரம்.!
14 வயது சிறுமி ஒருவர் தனது தாய் மற்றும் சகோதரனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த ரயில்வே துறையில் உயர் அதிகாரிகளாக பணியாற்றி வந்த தம்பதியினருக்கு 14வயது மகள் ஒருவர் உள்ளார். துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வந்த இவர் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் சமீபகாலமாக இந்த சிறுமி கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சிறுமி தனது வீட்டில் இருந்த ஜாமை எடுத்து குளியலறையில் கண்ணாடியில் வாழத் தகுதியற்ற மனிதப்பிறவி என எழுதியுள்ளார்.
அதன் பின்னர் துப்பாக்கி எடுத்து தனது தாய் மற்றும் சகோதரனை அடுத்தடுத்து தலையில் சுட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சிறுமியின் வீட்டிற்குச் சென்று சிறுமியிடம் நடத்திய விசாரணையில் தான்தான் தனது தாய் மற்றும் சகோதரனை கொலை செய்ததாக அந்த சிறுமி ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும் குளியல் குளியல் அறையில் எழுதி வைக்கப்பட்டிருந்த வாக்கியம் சிறுமியின் கையெழுத்து தான் என்பதை உறுதி செய்த போலீசார் சிறுமியை கைது செய்து அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தாய் மற்றும் சகோதரனைக் கொலை செய்த சிறுமி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் கைகளை வெட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.
சிறுமி ஏன் தனது தாய் மற்றும் சகோதரனை கொலை செய்தார்? கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே கடும் மன அழுத்தத்தில் இருந்த அந்த சிறுமி, மன அழுத்தத்தின் காரணமாக இப்படி செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
14 வயது சிறுமி ஒருவர் தனது தாய் மற்றும் சகோதரனை கொடூரமான முறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.