வயிற்று வலியால் துடித்த 14 வயது சிறுமி! பரிசோதனையில் 8 மாத கர்ப்பம்! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

வயிற்று வலியால் துடித்த 14 வயது சிறுமி! பரிசோதனையில் 8 மாத கர்ப்பம்! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!


14-years-girl-girl-found-8-months-pregnant

தெற்கு காஷ்மீரை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு துடித்து வந்துள்ளார். வலியால் துடித்த சிறுமியை அவரது தந்தை உள்ளூர் சாமியாரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அவர் பூஜை செய்த நிலையிலும் சிறுமிக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்துவந்துள்ளது.

இதனையடுத்து வலியால் துடித்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்த போது மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மருத்துவ பரிசோதனையில் சிறுமி 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

arrest

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அந்த சிறுமியின் வீட்டருகில் வசிக்கும் அவரின் 35 வயது உறவினர் அடிக்கடி சிறுமி வீட்டுக்கு வந்து சிறுமி தனியாக இருக்கும் போது மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரை தொடர்ந்து சீரழித்து வந்திருக்கிறார்.

மேலும் இதை வெளியில் சொல்லக்கூடாது எனவும் சிறுமியை மிரட்டியுள்ளார், இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானது தெரியவந்தது. இதனையடுத்து இதற்க்கு நான் தான் காரணம் என குற்றவாளி போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர்.